Estilo Books Pvt Ltd
Yaazhini/யாழினி- Thevakie Karunagaran/தேவகி கருணாகரன்
Yaazhini/யாழினி- Thevakie Karunagaran/தேவகி கருணாகரன்
Couldn't load pickup availability
தேவகியின் பெரும்பாலான கதைகள் பண்பாட்டு விழுமியங்களையும்
தொட்டுச்செல்கின்றன.
தாயகம் விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தாலும்,
குடும்ப வன்முறையினால், மற்றும் ஒரு நாட்டுக்கு தப்பிச்சென்று
வாழவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பெண், இலங்கையில்
போர்க்காலத்தில் காணாமல் போன கணவன் மீண்டும் வரமாட்டான்
என்ற நம்பிக்கையில் மற்றும் ஒரு இல்லற பந்தத்திற்குள் நுழைந்து,
மீண்டும் நிர்க்கதியாகும் பெண், பெற்றோராகவிருக்கும் இரண்டு ஆண்களின்
மத்தியில் வளரும் குழந்தை முதலான கதைகள் உட்பட அனைத்துக்கதைகளுமே
நனவிடை தோய்தல் உத்தியுடன்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றன.
லெ.முருகபூபதி
அவுஸ்திரேஎலியா
யாழினி குறுநாவல் முன்னிறுத்தும் பிரச்சினை மிகமுக்கியமானது.
விசாரணைக்காக இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனின் வாழ்வில் நிகழும் உறவுச்சிக்கல்
அதனால் ஏற்படும் உளவியல் ரீதியான தடுமாற்றங்கள் ஆகியவற்றை எப்படி
கையாள்கிறார்கள் என்பதைத்தான் தேவகி மிகக் கவனமாக எந்த இடத்திலும் ஒரு சிறு
இழை நழுவாமல் குறுநாவலாகப் படைத்திருக்கிறார்.
பழிவாங்குதலும் வெறுப்பும் எரிச்சலும் பொங்கிப் பெருக வேண்டிய அவலச் சூழலில்
சளைக்காமல் அன்பை விதைக்கிறார் தேவகியம்மா. இக் குறுநாவல் அன்பின் ஒளி.
நெய்வேலி பாரதிக்குமார்
சென்னை
Share
